கிளிநொச்சி சிறுவர் இல்லத்தில் பாலியல் துஸ்பிரயோகம்; இருவர் கைது!

Read Time:1 Minute, 22 Second

rapenew2கிளிநொச்சியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கிளிநொச்சி காவல்துறை கைது செய்துள்ளது. குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இவர்களைப் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் நீதிமன்றம் குறித்த நபர்களில் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றைய நபரை ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் செல்ல அனுமதியளித்துள்ளது. அத்துடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் வாரத்தில் ஒரு நாள் கிளிநொச்சி காவல் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவூ
Next post மட்டக்களப்பில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது