தென் சீனாவில் கனமழைக்கு 93 பேர் பலி
Read Time:57 Second
தென் கிழக்கு சீனாவில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளனர். 1.2 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சீனாவின் உள்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புஜியன் மாகாணத்தின் கடலோரப்பகுதியில் மே மாத முடிவிலிருந்து இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். குலாங்சி மாகாணத்தில் மழை தீவிரமடைந்ததையொட்டி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதியில் திங்கள்கிழமையிலிருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.