பணிப்பெண்ணாகச் செல்லும் குடும்பங்களிலேயே துஷ்பிரயோகங்கள்
Read Time:1 Minute, 11 Second
பெண்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பெரும்பாலும் மலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் குடும்பங்களிலேயே இடம்பெறுவதாக ஆய்வூகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இணைப்பாளர் கே. யோகேஸ்வரி தெரிவித்துள்ளார். கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியிலிருந்து அமெரிக்கா, சிலி நாடுகளில் நடைபெறவூள்ள, பெண்களுக்கெதிரான மனித உரிமை மீறல் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்கென மாணவிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Average Rating