பிரித்தானியாவில் 50 இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இந்தியருக்கு சிறை
Read Time:1 Minute, 23 Second
பிரித்தானியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கணக்காளராக வேலை பார்த்த மும்பையை சேர்ந்த ரிஷி கோசைன்(வயது 41) என்பவர், தன் வேலை நேரம் போக 50 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தினார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர் தலைமையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் பாலியல் தொழிலாளர்களின் சம்பளத்தில் 30 முதல் 35 சதவீதத்தை இவர் பெற்றுக் கொண்டதாகவும் பாலியல் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுடன் இருந்த போது அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ரிஷிக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் இரண்டரை ஆண்டு சிறை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
Average Rating