யாழ். மிதிவெடி அகற்றல் முக்கிய பகுதிகளில் துரிதம்

Read Time:2 Minute, 12 Second

land.Mithivadeயாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசசெயலர் பிரிவில், கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளில் கட்டுவனில் ஒருபகுதி தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றி முடிவடைந்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்வூக்குத் தேவையான நிலப்பரப்புக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றி முடிக்கப்பட்டுவிடும் என யாழ்.மாவட்ட செயலக மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் வ.முருகதாஸ் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்வூக்குத் தேவையான பகுதிகள்இ அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்பதற்குரிய பகுதிகள் என்பன இனங்காணப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் வலி. வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் அரச அதிபரால் முன்னுரிமைப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன. கட்டுவன் பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்பிலேயே தற்போது கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எஞ்சிய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றி அந்த நிலப்பரப்புக்கள் கையளிக்கப்பட்டுவிட்டன. யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்வூக்குத் தேவையான நிலப்பரப்பு மற்றும் அபிவிருத்தித் தேவைக்கான நிலப்பரப்பில் இவ் ஆண்டு இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றி முடிக்கப்படும் என அவர் மேலும் கூறியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
Next post இன்றைய ராசிபலன்கள்:22.02.2013