இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் முன்னாள் புலி போராளி! (PHOTOS)
Read Time:1 Minute, 12 Second
இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் இணைந்துள்ள புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலி உறுப்பினரான எஸ். சாந்தனி நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துள்ளார்..
குறித்த முன்னாள் போராளி சாந்தினி ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் வவுனியா ‘சிரிலிய சவிய’ இல்லத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானார்.
அதன்பின்னர் சர்வதேச கல்லூரியொன்றில் உயர் கல்வி பெற்றதன் பின்னரே இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் சாந்தனி இணைந்துள்ளார்.
இந்நிகழ்வில் முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்சவும் ஜனாதிபதியின் புதல்வரான இலங்கைக் கடற்படையின் உப லெப்டினன்ட் யோஷித ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளனர்.
One thought on “இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் முன்னாள் புலி போராளி! (PHOTOS)”
Leave a Reply
You must be logged in to post a comment.
I was sreiuosly at DefCon 5 until I saw this post.