மனைவியின் தங்கையூடன் குடும்பஸ்தர் நஞ்சருந்தி தற்கொலை
Read Time:1 Minute, 9 Second
நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவூக்கு உட்பட்ட கரோலினா தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் யூவதியொருவரும் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் முணுசாமி மாடசாமி(30) எனவூம் அவரது மனைவியின் தங்கையான செல்வராஜா ராசமலர்(24) எனவூம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் கரோலினா தோட்டத்திலுள்ள மலையொன்றின் உச்சிக்கு சென்ற இவர்கள் இருவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்திருப்பதாகவூம் அதன் காரணமாகவே நஞ்சருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவூம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Average Rating