மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் ஐவர் பலி
Read Time:48 Second
கண்டி, நாவலப்பிட்டி வெலிகம்பொல பாலத்திற்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞர்கள் ஐவர் நீரில் மூழ்கி பலியாகியூள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுக் கொண்டிருந்த இளைஞர்கள் ஐவரே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியூள்ளனர். உயிரிழந்த ஐந்து இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating