குற்றசாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் -ஜூன் லம்பேர்ட்
Read Time:1 Minute, 10 Second
இலங்கைக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியூள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் தேசியமட்ட விசாரணைகளுக்கு மேலாக சர்வதேச சுயாதீன மீளாய்வூ விசாரணைகளும் அவசியம் என ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஒன்றியத்தின் தெற்காசிய பிராந்திய தலைவர் ஜீன் லம்பேர்ட் வலியூறுத்தியூள்ளார். இலங்கையில் தொடர்ந்தும் பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படும் நிலை தொடர்வது குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமை காவலர்களுக்கு உயிரச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊக்கமும் காரணமாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக் காட்டியூள்ளார்.
Average Rating