இலங்கையின் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி
இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியத் தொழிலாளர்கள் வேலைசெய்ய அனுமதி அளிக்கப்படவூள்ளது. நாட்டு மக்கள் கொரியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் தொழிலாளர்களாக பணியாற்ற விரும்பிய போதிலும்இ உள்நாட்டில் தொழில்செய்ய விரும்பவில்லை என அமைச்சர் மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் சு+ழ்நிலையில் இந்தியத் தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில் பிழையில்லை என அவர் சுட்டிக்காட்டியூள்ளார். வடக்கு கிழக்கில் அறுவடை காலங்களில் இந்தியத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.தொழிலாளர்களுக்கு நாட்டில் நிலவிவரும் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு இந்தியத் தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மூன்று மாத கால அடிப்படையில் இந்தியத் தொழிலாளர்களுக்கு தொழில் வீசா வழங்கப்பட உள்ளது.தென் இந்திய ஊழியர்கள் மிகவூம் குறைந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு கடமையாற்றக் கூடியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating