விடுதலைப் புலிகள் பற்றி சுப்ரமணியசாமி டுவிட்டரில் குசும்பு
விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குசும்புத்தனமான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி. ஞாயிறன்று ட்விட்டரில், விடுதலைப்புலிகள் பற்றி கருத்து ஒன்றை தட்டி விட்டிருக்கிறார் சுவாமி. விடுதலைப் புலிகளின் ஆங்கில சுருக்கமான LTTE (Liberation Tigers of Tamil Eelam) என்பதற்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார். அவரது விளக்கத்துக்கு, “தொலைந்த தமிழர்கள் எலிகளாக மாறியது” என அர்த்தம் வருகிறது. இதுதான் சுப்பிரமணியம் சாமியின் டிவிட் செய்தி: What does the acronym LTTE nowadays stand for? Lost Tamils Turned Eleegal! (Eleegal in Tamil means Rats.) விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி இடக்கான கருத்துக்கள் தெரிவிப்பதில் முன் நிற்பவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி கொழும்புவில் நடைபெற்ற ராணுவ மாநாடு ஒன்றின் 2-வது நாள் நிகழ்ச்சிகளில் பேசுவதற்காக, இந்தியாவில் இருந்து சுப்ரமணியம் சுவாமி அழைக்கப்பட்டிருந்தார். அதிகளவில் ராணுவத்தினர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சுக்கு, அமோக வரவேற்பு காணப்பட்டது.
Average Rating