மைத்துனியிடம் சில்மிஷம்.. மறுத்ததால் மிதித்துக் கொன்ற 61 வயது அக்கா புருஷன்

Read Time:2 Minute, 19 Second

images (1)ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 61 வயது முதியவர் தனது விருப்பத்துக்குப் பணிய மறுத்த தனது மைத்துனியை நெஞ்சில் மிதித்துக் கொன்றார். அந்தக் காம வெறியரை போலீஸார் கைது செய்தனர். கற்காத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். இவரது மனைவி மல்லிகா. 45 வயதாகிறது. இருவருக்கும் குழந்தை இல்லை. மல்லிகாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மல்லிகா தனது அக்காள் மாணிக்கவள்ளி வீட்டுக்கு இடம் பெயர்ந்தார். அவரது ஆதரவில் இருந்து வந்தார்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட மாணிக்கவள்ளியின் கணவர் முனியாண்டி – இவருக்கு 61 வயதாகிறது – தனது மைத்துனிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். ஆனால் மல்லிகா உடன்படவில்லை. இருந்தாலும் விடாமல் தினசரி குடித்து விட்டு வந்து மல்லிகாவை தொந்தரவு செய்து வந்தார்.

ஆனால் மல்லிகா சற்றும் இறங்கி வரவில்லை. அக்காவுக்குத் தெரிவித்தால் பிரச்சினையாகி விடும் என்பதால் பொறுமை காத்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி முன்பாகவே மல்லிகாவை தொந்தரவு செய்து அடித்துள்ளார் முனியாண்டி. இதைப் பார்த்து ஆத்திரமுற்றார் மாணிக்கவள்ளி. கணவருடன் சண்டைக்குப் போய் விட்டார். அப்போது ஏற்பட்ட அடிதடியில் மல்லிகாவின் நெஞ்சில் ஓங்கி மிதித்தார் முனியாண்டி.

இதில் கீழே விழுந்த மல்லிகா சிறி்து நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து முனியாண்டியைக் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தில் கனடா உறுதி
Next post (வீடியோவில்) இலங்கை போர்குற்றம் குறித்து இந்திய நாடாளுமன்றில் விவாதம்..