விசுவமடுவிலுள்ள பிரபாகரனின் வீட்டை பார்வையிட படையினர் அனுமதி!

Read Time:1 Minute, 42 Second

Ltte.PirabaHomeமுல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இந்த வீட்டைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

விசுவமடு பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் இரண்டு அடுக்கில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதுடன் இங்கிருந்தவாறே பிரபாகரன் சர்வதேச தொடர்புகளை மேற்கொண்டு வந்தார் என்று படையினர் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி விசைப்படகு மற்றும் முன்னாள் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த பயணம் செய்யும் போது இயந்;திரக் கோளாறு காரணமாக தரையிறங்கிய உலங்குவானூர்தி என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய போர்க் கருவிகள், விடுதலைப் புலிகளின் சீருடைகள், புலிக்கொடி மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய உபகரணங்கள் என்பனவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள் :28.02.2013
Next post தமிழரசுக் கட்சி இணங்காவிட்டால் ஏனைய 4 கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவூ செய்யூம் -வினோ எம்.பி