பாணந்துறையில் தாய் தந்தை குழந்தை ஆகியோரின் சடலங்கள் மீட்பு
Read Time:1 Minute, 9 Second
கொழும்பு புறநகரான பாணந்துறை சாகர மாவத்தைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தாய்இ தந்தை மற்றும் எட்டுமாத குழந்தை என மூன்று சடங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பாணந்துரை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றுகாலை குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவரை அடுத்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸார் குறித்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஆண் தூக்கிட்ட நிலையிலும் பெண் கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் இறந்தும் குழந்தை மெத்தையில் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டுள்ளனர்.
Average Rating