இரு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை கனடாவில் மறுப்பு
Read Time:1 Minute, 6 Second
இரண்டு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை கனடாவின் மத்திய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எம்.வி. சன் சீ கப்பலின் மூலமாக கனடாவிற்குள் பிரவேசித்த இருவர், புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். எம்.வி. சன் சீ கப்பலில் பயணித்த காரணத்திற்காக கனேடிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கனவே புகலிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த இலங்கையர்களை கனடா நாடு கடத்தினால் சொந்த நாட்டில் அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் மீள விசாரணை நடாத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
Average Rating