பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என்பவர் மோசடி துஸ்பிரயோக சம்பவத்தில் கைது

Read Time:2 Minute, 15 Second

pikku.pothipalasenaபொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என தன்னை கூறிக்கொள்ளும் பௌத்த பிக்கு ஒருவர் கொழும்புஇ மருதானைஇ மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அவர் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர்மீது சிறுவர் துஷ்பிரயோகம் பண மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியூள்ளது. இதுதொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்இ ‘சிறுவர் உலகம் நீயூம் நானும்” என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கி இந்த பௌத்த தேரர் செயற்பட்டு வந்தார். இவர் தங்கியிருந்த மாடிக் கட்டடத்தை எமது பொதுபல சேனாவின் அங்கத்தவர்கள் முதலாம் திகதி இரவூ சுற்றிவளைத்து சோதனை செய்தபோதுஇ அவரது அறையில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றமைக்கான பல ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன் இவர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமைக்கான பல ஆவணங்களும் அறையிலிருந்து மீட்கப்பட்டன. பலவந்தமாக பணம் அறவிட்டமைஇ தாக்குதல் நடத்தியமை தொடர்பிலும் இவர் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அத்துடன் 12 இலட்சம் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் தங்கியிருந்த இடத்தினைச் சோதனையிட்ட எமது பொதுபல சேனாவின் இளைய பிக்குகள்இ பின்னர் இவருடைய காவியூடையை அகற்றி மாளிகாவத்தை பொலிஸில் ஒப்படைத்தனர் என்று கூறியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (03.03.2013)
Next post கனடா; ஐந்து வயதுச் சிறுமி மீது பலாத்கார செக்ஸ்!