யாழ். வைத்தியசாலையில் இரு சடலங்கள் ஒப்படைப்பு
Read Time:1 Minute, 0 Second
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றிரவூ இரு சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்படைக்கப்பட்ட சடலங்களில் ஒன்று கொக்குவில் கிழக்கு பொற்பதிலேன் பகுதியைச் சேர்ந்த 69வயதான சின்னையா பரமசாமி என்ற வயோதிபருடையது. இதனை யாழ்.கோப்பாய் பொலிஸார் கிணறு ஒன்றிலிருந்து மீட்டுள்ளனர். மற்றையது சங்கானைப் பகுதியில் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் சோமசுந்தரம் புவனதாஸ் (49) என்பவரதாகும். இதில் சோமசுந்தரம் புவனதாஸ் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating