ஏறாவூர் மீராக்கேணி பகுதியில் பாடசாலைச் சிறுமி கடத்தப்பட்டு தோடு களவூ
Read Time:1 Minute, 24 Second
5 வயது பாடசாலை மாணவியான சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு அவரின் தோடு அபகரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாணவியின் பெற்றௌரால் நேற்று புதன்கிழமை ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் மீராகேணியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றுக்காலை வீட்டிலிருந்து பாடசாலைக்கு குறித்த மாணவி நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியால் வந்த நபர் குறித்த மாணவியை தனது சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேறொரு பக்கமாக அழைத்துச் சென்று குறித்த மாணவி காதில் போட்டிருந்த தங்கத் தோட்டை கழற்றி எடுத்துவிட்டு அவரை அந்த இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், மாணவி அழுதவாறு இடம்தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த போது அவ்வழியால் வந்த பிறிதொரு நபர் சிறுமியை பாடசாலையில் கொண்டு சேர்த்துள்ளார். பின்னரே மேற்படி களவூ சம்பவம் தெரியவந்துள்ளது.
Average Rating