கனடா பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் உடல்: கனேடியப் பொலிஸார் விசாரணை
Read Time:1 Minute, 10 Second
ஈழத்தை பூர்வீகமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்யராஜ் மகேந்திரன் என்பவரது உடல் நயாகரா நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள கிங்க்ஸ் பிரிட்ஜ் பூங்காவில் மர்மமான முறையில் இறந்த நிலையில் இருந்து ஏப்ரல் 21 ஆம் திகதி 2012 ஆம் ஆண்டு மீட்க்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக கனேடியப் பொலிஸார் நடாத்திய முதற்கட்ட விசாரணையில் சத்யராஜை யாரோ சிலர் நயாகரா நகரின் வெளியே கொலை செய்து விட்டு உடலை மட்டும் பூங்காவில் போட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஸ்காபுரோ மற்றும் மார்க்கம் பகுதி மக்களின் சாட்சியங்களுக்காக நயாகரா நகர காவல்துறை அதிகாரிகள் மீண்டும் இச்சம்பவம் குறித்து துப்புத் துலக்கத் தொடங்கியுள்ளனர்.
Average Rating