மது ஒழிக்கச் சென்ற பொலிஸாருக்கு மண்வெட்டியால் அடி!
Read Time:56 Second
மது விற்பனையாளர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி ராஜாங்கனை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ராஜாங்கனை பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மது உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடச் சென்றவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மது உற்பத்தியாளரால் மண்வெட்டியில் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது ராஜாங்கனை யாய 11 வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். தாக்குதல் நடாத்தியவரை கைது செய்ய ராஜாங்கனை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Average Rating