முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தானிடம் முறைப்பாடு

Read Time:1 Minute, 40 Second

Ani.Pakistan.1இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் தூதுவரிடம் முறைப்பாடு செய்ததாக தமிழ் முஸ்லிம் முன்னணியின் தலைவர் அசாத்சாலி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் பற்றிய பேச்சுக்களின் போது, பாகிஸ்தானும், இந்தோனீசியாவும் ´´இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது´´ என்ற வகையில் பேசியதாக கூறிய அசாத்சாலி, அது தவறு என்றும் ஆகவே அவர்களுக்கு அது குறித்து விளக்கும் வகையில் இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவரைக் கண்டு தாம் பேசியதாகக் கூறியுள்ளார். இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் போது, அவர்கள் ஹலால் போன்ற பல பிரச்சினைகள் எதிர்கொள்ளும்போது அந்த இரு நாடுகளும் இவ்வாறு பேசியது தவறு என்று கூறும் அவர், ஆகவே அது குறித்து இந்த நாடுகள் ஐநாவில் சரியான கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தூதுவரிடம் தாம் கேட்டதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சர் மேர்வின் சில்வாவின் மூத்த புதல்வர் மாலக சில்வாவின் உல்லாச வாழ்க்கை (PHOTOS)
Next post இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (15.03.2013)