தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபர் கைது
Read Time:1 Minute, 15 Second
போலி நாணயத்தாள் வைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த முகமது கியாஸ், 38, போலி நாணயத் தாள்களை வைத்திருந்ததாக, ஏழு கிணறு பொலிஸாரால், 2001ல், கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், பிணையில் வெளிவந்த பின் தலைமறைவாகி இலங்கைக்கு தப்பி சென்று விட்டார். சர்வதேச பொலிஸ் உதவியுடன், சிவப்பு அட்டை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு, வேறு பெயரில் வந்திருப்பதாக, சி.பி.சி.ஐ.டி., போலி நாணயத்தாள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு, தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி சென்ற பொலிஸார், முகமது கியாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Average Rating