69 வயது பெண் வல்லுறவின் பின் படுகொலை
Read Time:59 Second
69 வயதான பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து படுகொலை செய்த சம்பவம் ஒன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கொலையுண்டவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணாவார். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் நடைபாதையில் வியாபாரம் செய்யும் மூவரே இந்தப் பெண்ணை அநுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் படுகொலை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது. அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating