இன்று அமெரிக்காவின் பிரேரணை சமர்ப்பிப்பு
அமெரிக்காவினால் மனித உரிமைகள் மாநாட்டில் தாக்கல்செய்யப்பட்ட பிரேரணையின் சீர்த்திருத்தம் செய்யப்பட்ட இறுதி வடிவம் இன்று மாநாட்டில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவூள்ளது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையில் 25வது மனித உரிமை மாநாட்டு அமர்வின் போதுஇ அர்ப்பணிபுடனான பொது விவாதம் ஒன்றுக்கு அமெரிக்கா கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிககையை மனித உரிமைகள் ஆணையாளரின் ஊடாக இன்று சபையில் சமர்ப்பிக்கப்படவூள்ளது. இதன்போது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுஇ அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் வெளிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரேரணையின் இறுதி வடிவம் தயாரிக்கப்படுவதற்கு முன்னர்இ நேற்றைய தினம் இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துதல் தொடர்பான கூட்டம் ஒன்று ஜெனீவாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அமெரிக்காவின் பிரேரணையில் இருந்த சில கடுமையான சொற்பிரயோகங்கள் மென்மைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating