இந்தியாவின் நிலைப்பாடு நாளை வெளியிடப்படுமென அறிவிப்பு
ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு நாளை வெளியிடப்படவூள்ளதாக இந்திய வெளியூறவூத்துறை அமைச்சர் சல்மன்குர்சித் தெரிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇ பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர்இ அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் அமெரிக்காவின் இந்த பிரேரணையை சீர்த்திருத்த வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் யூத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வலியூறுத்தும் வகையில் இந்த தீர்மானத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அதன் தலைவர் மு.கருணாநிதி வலியூறுத்தியூள்ளார். அத்துடன் இந்த பிரேரணையை இந்தியாவே தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating