வவுனியாவில் ஸ்ரீடெலோ கட்சி இன்று ஆர்ப்பாட்டம்
Read Time:56 Second
இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னி இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திரால் மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெனீவாவில் அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீடெலோ கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கண்டி வீதியிலிருந்து ஆரம்பமாகி பஸார் வீதிவழியாக வவுனியா மாவட்டச் செயலகத்தை அடைந்தது.
Average Rating