விளம்பரம் மூலம் ஐந்து பெண்களை திருமணம் செய்தவர் விளக்கமறியலில்

Read Time:1 Minute, 25 Second

ANI.foxபத்­தி­ரி­கை­களில் வெளிவந்த மண­மகன் தேவை விளம்­ப­ரங்­களில் மண­ம­கள்­களைத் தெரிவு செய்து அவர்­களை ஏமாற்றி ஐந்து திரு­ம­ணங்­களை செய்துகொண்டு 13லட்­சத்து 85 ஆயிரம் ரூபா­வையும் எட்டு தங்கப் பவுண்களையும் மோசடி செய்த நப­ரொ­ரு­வரை கைது செய்த பொலிஸார் அநு­ரா­த­புரம் நீதி­மன்ற நீதிவான் திரு­மதி ருவந்­திகா மார­பண முன்­னி­லையில் ஆஜர் செய்­தனர். நீதவான் சந்­தேக நபரை எதிர்­வரும் 25 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்டார். விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்ட நபர் ராகம பட்­டு­வத்­தையைச் சேர்ந்த ஏ.டி. நிமல் கிரி­ஷாந்த குண­சே­கர என்­ப­வ­ராவார். அநு­ரா­த­புரம், வன்­னி­குளம் என்ற இடத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரின் முறைப்­பாட்டை அடுத்து இந்த நபர் கைது செய்­யப்­பட்­ட­தாக அநு­ரா­த­புரம் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் குணதி­லக நீதி­மன்­றத்தில் தெரி­வித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரிஎம்விபி கட்சிக்குள் மோதல்..
Next post நவநீதம்பிள்ளை வரம்பைமீறி செயற்படுகிறார் -அமைச்சர் சமரசிங்க குற்றச்சாட்டு