விளம்பரம் மூலம் ஐந்து பெண்களை திருமணம் செய்தவர் விளக்கமறியலில்
பத்திரிகைகளில் வெளிவந்த மணமகன் தேவை விளம்பரங்களில் மணமகள்களைத் தெரிவு செய்து அவர்களை ஏமாற்றி ஐந்து திருமணங்களை செய்துகொண்டு 13லட்சத்து 85 ஆயிரம் ரூபாவையும் எட்டு தங்கப் பவுண்களையும் மோசடி செய்த நபரொருவரை கைது செய்த பொலிஸார் அநுராதபுரம் நீதிமன்ற நீதிவான் திருமதி ருவந்திகா மாரபண முன்னிலையில் ஆஜர் செய்தனர். நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் ராகம பட்டுவத்தையைச் சேர்ந்த ஏ.டி. நிமல் கிரிஷாந்த குணசேகர என்பவராவார். அநுராதபுரம், வன்னிகுளம் என்ற இடத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் முறைப்பாட்டை அடுத்து இந்த நபர் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் குணதிலக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Average Rating