அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க முற்படுவதை எதிர்த்தும் ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்றுகாலை 10.30 மணிக்கு இந்த பேரணி நடைபெற்றுள்ளது. யாழ். கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டப் பேரணியானது, முனியப்பர் வீதியூடாக வைத்திசாலை வீதி, மணிக்கூட்டு கோபுர வீதி, ஸ்டான்லி வீதி, கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதிகள் ஊடாக பயணித்து பஸ் நிலையத்தை அடைந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
Average Rating