கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
Read Time:1 Minute, 0 Second
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்திற்கும், இந்தியாவிற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தேசிய இயக்கங்களின் ஒன்றியம் இந்த போராட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில், தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், மற்றும் ஆட்டோ உரிமையாளர்களின் தொழிற்சங்கங்கள் என்பன பங்கேற்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இதனால் காலி வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
Average Rating