பெண்ணொருவரை நிர்வாணப்படுத்தி கொடுமை
பெண்ணொருவரை நிர்வாணப்படுத்தி கண்ணில் மிளகாய் தூளை வீசி கத்தரிக்கோலால் அப் பெண்ணின் கூந்தலைக் கத்தரித்து அவரை தடியால் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களை 22,500 ரூபா ரொக்கப்பிணையிலும், ஆறு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுவிக்கும்படி நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிவான் ஏ.எம்.என்.பி. சமரசிங்க உத்தரவிட்டார். ஜா-எலை உருகம பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாவர். வஹட்டியகம, ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த முறைப்பாட்டாளரான பெண் 25.2.2013 ஆம் திகதி தமது வீட்டில் இருந்த போது காலை 10.30 மணியளவில் சந்தேக நபர்களான மூன்று பெண்களும் வீட்டில் நுழைந்து முறைப்பாட்டாளரின் உடைகளைக்கிழித்தெறிந்து நிர்வாணமாக்கியுள்ளனர். ஒரு பெண் கண்ணில் மிளகாய் தூளைப் போட்டுள்ளார். மற்ற பெண் கூந்தலை வெட்டியுள்ளார். மூன்றாவது பெண் தடியால் தாக்கியுள்ளதாக ஜா எல பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
Average Rating