லெபனானில் பணி புரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம்
Read Time:1 Minute, 7 Second
லெபனானில் பணி புரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பான முன்னெடுக்கப்படுவதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த இந்தப் பெண்ணின் சடலம் பொலிதீன் பை ஒன்றில் போடப்பட்டுக் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்து.
இந்த மாதம் 4 ஆம் திகதி இவ்வாறு பொலிதீன் பையிலிடப்பட இந்த இலங்கைப் பெண்ணின் சடலம் குப்பைத் தொட்டியிலிருந்தே மீட்கப்பட்டது. இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை லெபனான் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இலங்கைப் பெண் லெபனானில் பணிப் பெண்ணாகக் தொழில் புரிந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Average Rating