கொழும்பில் வெளிநாட்டு பெண்கள் 12பேர் கைது
Read Time:1 Minute, 1 Second
கொழும்பில் இரவு களியாட்ட விடுதிகளில் பணியாற்றி வந்த வெளிநாட்டுப் பெண்கள் 12 பேரை கொழும்பு, கொள்ளுபிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கொள்ளுபிட்டி பொலிஸார் இணைந்து நடத்திய தேடலின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டோரில் 6 சீன பெண்களும், 6 தாய்லாந்து பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுற்றுலா விசாவிலேயே இவர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Average Rating