கொழும்பு, கொட்டாவையில் மதமாற்றம் செய்வது தொடர்பில் கிறிஸ்தவ சபை மீது தாக்குதல்
Read Time:1 Minute, 21 Second
கொழும்பு, கொட்டாவை ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்;த்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் புதுந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரியவருகின்றது. இதனைத் தொடர்ந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு அந்த சபையினை சுற்றி வளைத்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலீசார் கூறுகையில், இந்நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வௌ;வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை பலவந்தமாக மதமாற்றத்துக்கு உட்படுத்துவதாக, குறித்த பிரதேசத்தில் உள்ள பெந்தகோஸ் சபையின்மீது குற்றம் சுமத்தப்பட்டத்தை தொடர்ந்து, இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating