ரஜினியின் மகள் ஐஸ்வர்யா அடுத்த படத்தினை ஆரம்பித்துள்ளார்..
Read Time:1 Minute, 9 Second
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் பின்னர் சத்தமில்லாமல் கவுதம் கார்த்தியை நாயகனாக்கி தனது அடுத்த படத்தினை ஆரம்பித்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அதிக எதிர்பார்ப்பினால் 3 படம் தோல்வியடைந்ததால் இம்முறை அடக்கமாகவே புதிய படத்தினை ஆரம்பித்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா. எதுவித ஆடம்பர விழாக்களுமின்றி ஆரம்பித்துவிட்டாராம். கவுதம் கார்த்தி நடித்த முதல் படமான கடல் படுதோல்வியைத் தழுவியது. அதேபோலவே ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘3’ படமும் தோல்வியடைந்தது. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து வெற்றி பெற புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
Average Rating