மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை சரீரப் பிணையில் விடுதலை
Read Time:1 Minute, 15 Second
தாய் வெளிநாடு சென்றிருந்த வேளையில் சொந்த மகளை இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தந்தைக்கு எதிரான வழக்கு நேற்று மாவனல்ல மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி சீனித் விஜேசேகர பத்தாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல தந்தைக்கு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். தன்னை தனது தந்தை தினமும் பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்டுத்துகின்றார் என ஹெம்மாத்தகமை பொலிஸில் மகள் முறைப்பாடு செய்யப்பட்ட பின் தந்தை கைது செய்யப்பட்டிருந்தார்.
Average Rating