மோசடியில் ஈடுபட முயன்ற கெமரூன் பிரஜை கைது

Read Time:2 Minute, 44 Second

arrastமின்னஞ்சல் மூலம் பண மோசடி செய்ய முயன்ற கும்பலைச் சேர்ந்த விசா நிறைவடைந்த நிலையில் இலங்கையில் தங்கியிருந்த கெமரூன் நாட்டுப் பிரஜை ஒருவரை அலவத்துகெடை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் அக்குறணையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, அக்குறணை, புளுகொஹொதென்னை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு நைஜீரிய பிரஜை ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் கிடைத்தது. அந்த மின்னஞ்சலில்; இலங்கையில் 71 கோடி ரூபா (57 இலட்சம் டொலர்) பெறுமதியில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் இதற்கு இலங்கையில் பொறுப்பு வாய்ந்தவராக புளுகொஹொதென்னை பிரதேசத்தை நபரை நியமிக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்குறணை, புளுகொஹொதென்னை பிரதேசத்தை சேர்ந்த நபர் இதற்கு இணக்கம் தெரிவித்தமைக்கு அமைய சில மின்னஞ்சல்கள் பரிமாறப்பட்டன. பின்னர் 71 கோடி ரூபா பணத்தை பெட்டி ஒன்றில் வைத்துக் கொண்டு ஒருவர் இலங்கை வருவதாகவும் அவரை சந்தித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும் புளுகொஹொதென்னை பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு பின் இவ்வாறு இலங்கை வந்தவர், புளுகொஹொதென்னை பிரதேசத்தை சேர்ந்த நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு வருமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு மறுத்துள்ள புளுகொஹொதென்னை பிரதேசத்தை சேர்ந்த நபர், அவரை அக்குறணைக்கு வருமாறு கூறியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸில் புளுகொஹொதென்னை பிரதேசத்தை சேர்ந்த நபர் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர் அக்குறணைக்கு வந்தபின் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை சரீரப் பிணையில் விடுதலை
Next post (வீடியோவில்) வாகன விபத்து… இப்படியும் சில சம்பவங்கள்…!!!