ஓட்டுமடம் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு
Read Time:1 Minute, 15 Second
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் சந்தியில் இரண்டு முஸ்லிம் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார். இரு குழுக்களுக்குமிடையில் நீண்ட காலமாக நிலவிவந்த கருத்து முரண்பாடுகளே இவ்வாறு வாள் வெட்டு சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 55 வயதுடைய முஸ்லிம் வர்த்தகரே கை துண்டிக்கப்பட்ட நிலையில் அசிட் வீச்சிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating