இலங்கை பிரேரணை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்
Read Time:1 Minute, 3 Second
இலங்கையை நட்பு நாடாக கருதுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்த பிரேரணை முன்மொழிந்துள்ளார். அத்துடன் இலங்கையில் தனி ஈழம் அமைக்கப்படுவதற்கு, இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் கோரப்பட்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகள் நிறுத்தப்படும் வரையில், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
Average Rating