யாழ். பொதுநூலகத்திற்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள்..
Read Time:1 Minute, 9 Second
யாழ். பொதுநூலகத்திற்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் சீனா அரசாங்கத்தினால் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. யாழ். பொது நூலகத்தில் யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இவ் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது சீன அரசாங்கத்தின் முதலாவது செயலாளர் கியூ கியூபிங்க வடமாகாண ஆளுநர் மற்றும் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவிடம் பெயர்ப் பலகையினை கையளித்து வைத்ததுடன் உசாத்துணை நூல் பகுதியினையும் நாடாவெட்டி திறந்து வைத்துள்ளார். சுமார் 20 மில்லியன் ரூபா நிதியில் குளிரூட்டிகள் மற்றும் கணணிகள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரம் உட்பட பல்வேறு உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
Average Rating