மூன்று சீனப் பிரஜைகள் கைது
Read Time:1 Minute, 5 Second
முருகைக் கற்களைக் கடத்திச் செல்ல முற்பட்ட நிலையில் மூன்று சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமான முறையில் முருகைக் கற்களை கடத்திக் கொண்டு சீனாவின் ஷங்காய் நோக்கி செல்வதற்கு தயார் நிலையிலேயே இவர்கள் கைதாகினர். இந்த மூன்று சீனப் பிரஜைகளும் ஹம்பாந்தோட்டை, மத்தளயில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட விமான நிலைய நிர்மாணப் பணிகளுக்காக வருகை தந்திருந்தமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்த மூன்று சீனப் பிரஜைகளிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட முருகைக் கற்கள் அரசுடைமையாக்கப்பட்டதுடன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
Average Rating