இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சூர்யா கார்த்தி ரசிகர்கள் உண்ணாவிரதம்
Read Time:1 Minute, 15 Second
இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை உண்ணாவிரதம் நடத்தவுள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்கான இப்போராட்டத்தில் நடிகர்களின் ரசிகர்களும் கைகோர்த்துள்ளனர். முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். இப்போது நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பியும் நடிகருமான கார்த்தியின் ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர். இவ்விரு நடிகர்களின் சென்னை மாவட்ட ரசிகர்கள் இணைந்து நாளை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் எதிரே, உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். இந்த உண்ணாவிரதத்தை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
Average Rating