ஈபில் டவருக்கு அச்சுறுத்தல்
Read Time:1 Minute, 20 Second
உலகின் மிகப் பெரிய கோபுரமான பிரான்ஸின் ஈபில் டவருக்கு நேற்றைய தினம் குண்டு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கோபுரத்தை பார்வையிடவந்த சுமார் 1400 பேர் வரையில் அவசரமாக பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் தொடர்ந்து 2 மணித்தியாலங்களுக்கு மேலாக சோதனை இடப்பட்ட போதும், அவ்வாறு குண்டுகள் எவையும் மீட்கப்படவில்லை. எவ்வாறாயினும் பிரான்ஸின் பல முக்கிய பகுதிகளில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மாலியில் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக பிரான்ஸ் படையினர் மோதல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், பிரான்ஸிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படுகிறது.
Average Rating