கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புட்ட 6 பேர் பனியினால் கைது
கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புட்ட 6 பேர் பனியினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் வோவிக்செயா எனுமிடத்தில் கடையொன்றில் ஊழியர்களை மிரட்டி கடையிலிருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
பிரதேசத்தில் தொடர்ந்தும் பனிபொழிவு நீடித்துள்ளதனால் திருடர்களின் கால் தடங்கள் கடையிலிருந்து அவர்கள் சென்றடைந்த கட்டிடத் தொகுதிவரையில் தெளிவாக காணப்பட்டுள்ளது. இதனால் பொலிஸாருக்கு அவர்களை இலகுவாக பின்தொடர்ந்து கைது செய்ய முடிந்துள்ளது.
முதலில் 4 பேரை கைது செய்து பொலிஸார் அதே தினத்தில் மாலையில் மீதி இருவரையும் கைது செய்துள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்ட அறுவரில் 3 பேரை விடுதலை செய்துள்ளனர். மற்றைய 3 பேரையும் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைத்துள்ளளர்.
இக்கொள்ளையுடன் 16 வயதான பெண்ணொருவரும் சம்மந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating