அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாய் ஒன்று அதிக சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை

Read Time:1 Minute, 45 Second

ANI.Dog.4அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாய் ஒன்று அதிக சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கும் பெலின்டா ப்ரிபெய்ன் என்ற பெண்மணி வளர்க்கும் ‘கோல்டன் ரிட்ரைவர்’ இன நாயொன்றே இவ்வாறு சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

சார்லி என பெயரிடப்பட்டுள்ள இந்நாய்க்கு தற்போது 6 வயதாகின்றது. உலக சாதனை எகடமி நடாத்திய ‘அதிக சத்தத்துடன் குரைக்கும் நாய்’ போட்டியில் கலந்து கொண்டது சார்லி. இதில் 113 டெசிபல் அளவான சத்தத்துடன் குரைத்த சார்லி வெற்றி பெற்றது.

இதன் மூலம் ‘உலகிலேயே அதிக சத்தத்துடன் குரைக்கும் நாய்’ என்ற கின்னஸ் சாதனையும் சார்லி படைத்துள்ளது. லண்டனைச் சேர்ந்த ஜேர்மன் செப்பர்ட் இன நாயொன்று 2009ஆம் ஆண்டில் 108 டெசிபல் அளவு சத்தமாக குரைத்ததே இதுவரை சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்த நாயின் உரிமையாளர் பெலின்டா கூறுகையில், உண்மையில், எனது நாய் மிகவும் அமைதியானது. அடிக்கடி வீட்டில் குரைத்து எரிச்சலூட்டாது. எனது கட்டளைக்கு கட்டுப்பட்டே குரைக்கும் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புட்ட 6 பேர் பனியினால் கைது
Next post காத்தான்குடி பகுதியில் லொறியில் சிக்குண்ட ஆண்குழந்தை பலி