காத்தான்குடி பகுதியில் லொறியில் சிக்குண்ட ஆண்குழந்தை பலி
Read Time:1 Minute, 4 Second
மட்டக்களப்பு, காத்தாங்குடி, ஆரியம்பதியில் நேற்றிரவு 8மணியளவில் லொறியின்கீழ் சிக்கியதில் 4வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியின் சாரதி, லொறியை தனது விட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிலுள்ள 16 வயது சிறுவன் லொறிறை துடைத்து சுத்தம் செய்யச் சென்ற நிலையில் அதனைச் செய்யாது லொறியை செலுத்த முற்பட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்த அயல் வீட்டிலுள்ள குழந்தை ஒன்று லொறியினுள் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. சந்கேநபரான 16 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating