மகரகம வாவிக்கரையில் மதுவருந்திய பெண்கள் கைது
Read Time:57 Second
கொழும்பு புறநகரான மஹரகம பிரதேசத்திலுள்ள வாவிக்கரையில் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் மாலையில் பியர் அருந்திக்கொண்டிருந்த மூன்று இளம் பெண்களை மஹரகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த இளம்பெண்கள் மூவரும் மஹரகம பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது இடமொன்றில் மது அருந்திய குற்றத்துக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating