உயிரிழந்த விபசாரி எழுந்து வந்த அதிசயம்

Read Time:1 Minute, 55 Second

ANI.SEXGIRLS.elisha_wall_thumbஹோட்­ட­லொன்றில் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­பட்ட விபச்சாரியொ­ருவர், சவப்­பெட்­டி­யி­லி­ருந்து எழுந்துவந்த சம்­பவம் ஸிம்­பாப்­வேயில் இடம்­பெற்­றுள்­ளது. புலவாயோ நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் வாடிக்­கை­யாளர் ஒரு­வ­ருடன் தங்­கி­யி­ருந்த இந்த விப­சாரி திடீரென உயி­ரி­ழந்­து விட்டதாக கூறப்­பட்­டது. அதனால் அதிர்ச்­சி­ய­டைந்த மேற்­படி வாடிக்­கை­யாளர் பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­வித்தார். பொலிஸார் உடலை பொறுப்­பேற்­ப­தற்­காக மருத்­துவ குழு­வொன்றை ஸ்தலத்­துக்கு அனுப்­பி­வைத்­தனர். அக்­கு­ழு­வினர் மேற்­படி பெண்ணின் உடலை உலோகத் தினா­லான சவப்பெட்­டியில் வைத்து வைத்­தியசாலைக்கு கொண்டுசெல்ல தீர்­மா­னித்­தனர். ஆனால் உடலை வாகனத்தில் ஏற்­றும்­போது, அப்பெண் விழித்­தெ­ழுந்து கூக்­கு­ர­லிட்டார். சவப்­பெட்­டி­யி­லி­ருந்து எழுந்த அப்பெண், நீங்கள் என்னை கொல்­லப்­பார்க்­கி­றீர்கள் என சத்­த­மிட்­ட­தாக ஊட­கங்கள் செய்தி வெளியிட்டுள்­ள­ளன. மேற்­படி நிகழ்வை பார்த்­துக்­கொண்­டி­ருந்த ஹோட்டல் விருந்­தி­னர்­களும் ஊழி­யர்­களும் பீதி­யினால் அவ்­வி­டத்­தை­விட்டு ஓடி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பின்னர் மருத்­துவக் குழு­வினர் வெறுங்கையுடன் திரும்பிச் சென்­றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகரகம வாவிக்கரையில் மதுவருந்திய பெண்கள் கைது
Next post புசல்லாவையில் காதல் விவகாரமாக சிறுமியைக் கடத்தியவர் கைது