உயிரிழந்த விபசாரி எழுந்து வந்த அதிசயம்
ஹோட்டலொன்றில் உயிரிழந்ததாக கூறப்பட்ட விபச்சாரியொருவர், சவப்பெட்டியிலிருந்து எழுந்துவந்த சம்பவம் ஸிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளது. புலவாயோ நகரிலுள்ள ஹோட்டலொன்றில் வாடிக்கையாளர் ஒருவருடன் தங்கியிருந்த இந்த விபசாரி திடீரென உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த மேற்படி வாடிக்கையாளர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். பொலிஸார் உடலை பொறுப்பேற்பதற்காக மருத்துவ குழுவொன்றை ஸ்தலத்துக்கு அனுப்பிவைத்தனர். அக்குழுவினர் மேற்படி பெண்ணின் உடலை உலோகத் தினாலான சவப்பெட்டியில் வைத்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல தீர்மானித்தனர். ஆனால் உடலை வாகனத்தில் ஏற்றும்போது, அப்பெண் விழித்தெழுந்து கூக்குரலிட்டார். சவப்பெட்டியிலிருந்து எழுந்த அப்பெண், நீங்கள் என்னை கொல்லப்பார்க்கிறீர்கள் என சத்தமிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளளன. மேற்படி நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்த ஹோட்டல் விருந்தினர்களும் ஊழியர்களும் பீதியினால் அவ்விடத்தைவிட்டு ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மருத்துவக் குழுவினர் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
Average Rating