இலங்கைத் தமிழருக்காக திரையுலகு போராட்டம் (PHOTOS)
இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும், முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்றுநடிகர் சங்கம் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், ராதாரவி, மனோபால, அஜீத், சூர்யா, கார்த்தி, சிவகுமார், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.
மாணவர்கள், பெற்றோர், பணியாளர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தொடர்ச்சியாக கண்டித்து வருகின்றனர். இலங்கை ஜனாதிபதி போர்க்குற்றவாளி எனவும் அவரை கூண்டிலேற்றி தண்டிக்க கோரியும் யாவரும் போராடி வருகின்றனர். தனித் தமிழீழம் ஒன்றே உரிய தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டதால், அனைத்துத் தரப்பினரும் தனி ஈழத்துக்கு ஆதரவாகத் திரண்டுள்ளனர்.
இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், அனைத்து நடிகர்-நடிகைகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இப்போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் தொடங்கியது.
இதில் ரஜினி, கமல் பங்கேற்கின்றனர். விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், ஜீவா, சிம்பு, பரத், விமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், நயன்தாரா, ஸ்ரேயா, ஹன்சிகா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். நடிகர், நடிகைகள் பலர் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் படப்பிடிப்புகளில் இருந்தார்கள். அவர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்யுள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating