பெஷன் பக் களஞ்சியசாலை தாக்குதல், மூன்று பிக்குகள் உட்பட சந்தேகநபர்கள் விடுதலை
Read Time:57 Second
கொழும்பு, மகரகம, பெபபிலியான பகுதியில் அமைந்துள்ள பெஷன் பக் ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது கடந்த 28ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பிக்குகள் உட்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை இன்றையதினம் நுகேகொட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியிருந்தனர். இதன்போது பெஷன் பக் நிறுவனத்தினர், இந்த வழக்கினை தொடர்ந்து மேற்கொள்ள தேவையில்லை என நீதவானுக்கு அறிவித்திருந்தனர். இதனையடுத்து நீதவான் சந்தேக நபர்கள் 17 பேரையும் எச்சரித்து விடுதலை செய்துள்ளார்.
Average Rating