கிளிநொச்சி உதயன் அலுவலகம் மீது தாக்குதல்

Read Time:1 Minute, 34 Second

kilinochiஉதயன் நாளிதழின் விநியோகப் பணிகளை முடக்கும் நோக்குடனும், பணியாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் உதயனின் கிளிசொச்சி அலுவலகம்மீது இனந்தெரியாத கும்பலொன்று இன்றுஅதிகாலை 5 மணிக்குத் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் உதயன் கிளிநொச்சி அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள், மற்றும் கிளை முகாமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளார்கள். வழமைபோன்று பத்திரிகைப் பணியில் ஈடுபடும் வாகனத்தில் பத்திரிகைகளை எடுத்துச் சென்று யாழ் – கண்டி நெடுஞ்சாலை, கரடிப்போக்குச் சந்தியி்ல் அமைந்துள்ள உதயன் அலுவலகத்தில் பத்திரிகைகளை இறக்குவதற்கு ஆயத்தமானபோது அலுவலகத்தில் அயலில் உள்ள ஆள்களற்ற கட்டடங்களினுள்ளும், பற்றைகளுக்குள்ளும் மறைந்திருந்து வெளிப்பட்ட காடையர்கள் வாகனத்தில் வந்த பணியாளர்களைக் கொட்டன்களினால் தாக்கிக் காயப்படுத்தியதோடு, அலுவலகத்தினுள்ளே புகுந்து அடித்து நொருக்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானியாவில் மிகவும் பெரிய பர்கர் தயாரிப்பு
Next post இன்றைய ராசிபலன்கள்: 03.04.2013